மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 9ந் தேதி நடக்க இருந்த தேர்வு, வருகின்ற 24-ந் தேதியும், கடந்த 10-ந் தேதி நடக்க இருந்த தேர்வு வருகின்ற 31-ந் தேதியும் நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 9ந் தேதி நடக்க இருந்த தேர்வு, ஜனவரி 19ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கடந்த 10-ந் தேதி நடக்க இருந்த தேர்வு ஜனவரி 20ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.