இன்று நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடை காலி பணியிடங்களுக்கான நேர்காணல் தொடங்க இருக்கிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஷ்ரேயா சிங் இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களான விற்பனையாளர்கள் – 181 நபர்களும் கட்டுனர்கள் – 19 நபர்களும் காலியாக உள்ளது.
இந்த காலிப்பணியிடங்களான நேர்காணல் இன்று முதல் வருகிற 27-ம் தேதி வரை விற்பனையாளர்கள் பணிக்கும், 28 & 29-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கட்டுனர் பணிக்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நேர்காணல் நடைபெற உள்ளது.
மாற்று திறனாளிகள் மாவட்ட நல அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை நேர்காணலுக்கு கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.